Colombo (News 1st) கடந்த 2 நாட்களில் இந்தியாவிலிருந்து கடற்பரப்பின் ஊடாக நாட்டிற்கு பிளாஸ்டிக் வந்தடைவது அதிகரித்துள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கடலில் மூழ்கிய எல்சா 3 கப்பலில் இருந்த பிளாஸ்டிக் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அடங்கிய மற்றுமொரு கொள்கலன் திறக்கப்பட்டிருக்கலாம் என அனுமானிப்பதாக அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாண கடற்பரப்பு...