Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று(11) மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.வழக்கு விசாரணை சஹன் மாபா பண்டார, ரஷ்மி சிங்கப்புலி, ரசந்த கொடவெல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் 04 குற்றவாளிகளுக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிற...