Colombo (News 1st) முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு விசேட விசாரணை பிரிவினூடாக மேற்கொள்வதற்கு நீதிமன்றம் இன்று (20) அனுமதி வழங்கியுள்ளது.நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்ன துப்பாக்கிசூடு பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மாலபே பொலிஸாரால் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த விச...