Colombo (News 1st) சித்திரை புத்தாண்டு இன்று(14) காலை இனிதே மலர்ந்தது.சூரிய பகவான் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரை வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது.தமிழ் வருடங்களை எமது முன்னோர்கள் அறுபதாக வகுத்துள்ளதுடன் பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய வரையில் அந்த 60 ஆண்டுகளின் பட்டியல் நீள்கிறது.படைத்தல் கடவுளான பிரம்மா இந்த அண்டத்தை சித்திரை மாதம் முதல் நாளில் படைத்ததாக புராணங்கள் பறைசாற்றுகின்றன.'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்பதை...