Colombo (News 1st) இன்று(06) முதல் எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் காற்று மற்றும் மழையுடனான நிலைமையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.தற்போது நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலைமையே இதற்கு காரணமாகும்.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கைக்கு அமைய, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது ம...