COLOMBO (News 1st) ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் இன்று(31) பிற்பகல் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தலா 1,000,000 ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டதுடன் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.தேசிய லொத்தர் சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு புறம்ப...