Colombo (News 1st) யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி சிறைச்சாலைக்குள் தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டு குற்றாவளியாக அறிவிக்கப்பட்ட 46 வயதான ரவி என்றழைக்கப்படும் பூபாலசிங்கம் ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் சிறைக்கூடத்திற்குள் அவர் த...