கல்வி துறையில் புதிய சீர்திருத்தங்கள்: பிரதமர்

கல்வி துறையில் புதிய சீர்திருத்தங்கள்: பிரதமர் விளக்கம்

by Staff Writer 12-07-2025 | 3:14 PM

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன் நோக்கங்கள் மற்றும் இலக்குகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று(12) விளக்கமளிக்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சீர்திருத்தங்களுக்கான கொள்கைகள், பாடத்திட்ட சீர்திருத்தம், சீர்திருத்தங்களைச் செயற்படுத்தும் நடைமுறைகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி போன்ற அடிப்படை விடயங்கள் குறித்து இதன்போது தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு மூலம் இந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் செயற்படுத்தப்படும் விதம் மற்றும் கண்காணிக்கப்படும் விதம் தொடர்பாகவும்  தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

21 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு அப்பால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட பிரஜைகளை உருவாக்குவதற்கான அடிப்படை அடித்தளத்தை அமைப்பது பிரதான நோக்கமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த  பிரஜைகளை நாட்டின் நிலையான தேசிய அபிவிருத்தி மற்றும் சமாதானச் செயன்முறைக்கு பங்களிப்பாளராக மாற்றுவது இந்த புதிய கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த தங்களின் கருத்துகள் மற்றும் புதிய முன்மொழிவுகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது முன்வைத்துள்ளனர்.

விசேட தேவைகள் உள்ள மற்றும் மாற்றுத்திறனாளிகளான பிள்ளைகளுக்கு இந்த கல்வி சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் தேவைகள் குறித்து இதன்போது விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.