மனித எச்சங்களுடன் கூடிய ஆடை கண்டெடுப்பு

பளையில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை கண்டெடுப்பு

by Bella Dalima 26-04-2024 | 4:57 PM

Colombo (News 1st) கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் நேற்றைய தினம் (25) கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்று கண்டெடுக்கப்பட்டதையடுத்து, பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் நீதவானுக்கு அறிவித்தனர். 

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று (26) குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.

அங்கு கண்ணிவெடி அகற்றும் பணியை தொடர்ந்து முன்னெடுக்குமாறும் கிடைக்கப்பெறும் எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வருமாறும் தற்போது கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், நாளை மறுதினம் திங்கட்கிழமை சம்பவ இடத்திற்கு வருகை தந்து மீண்டும் பார்வையிடுவதாகவும் நீதவான் இன்று தெரிவித்துள்ளார்.