கெஹலியவின் எழுத்தாணை மனுக்கள் விசாரிக்கப்படவுள்ளன

கெஹலிய ரம்புக்வெல்லவின் எழுத்தாணை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்

by Staff Writer 07-05-2024 | 5:03 PM

Colombo (News 1st) முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் எழுத்தாணை மனுக்களை இம்மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) தீர்மானித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி D.N.சமரகோன் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனை தவிர, மருந்து விநியோக பிரிவின் பணிப்பாளர்  டொக்டர் கபில விக்ரமநாயக்கவின் எழுத்தாணை மனுவையும் எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.