Colombo (News 1st) ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக செயற்படுகின்றமையை தடுத்து கடந்த மாதம் 4 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவிற்கு எதிராக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி D.N. சமரகோன் இன்று (07) நிராகரித்தார்.
இது தொடர்பான உத்தரவை மாவட்ட நீதிமன்றமே கோர வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.