கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

by Staff Writer 28-05-2025 | 5:34 PM

Colombo (News1st) சிலாபம், புத்தளம்  மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையும் உள்ள கரையோரப் பகுதிகளுக்கு அப்பாலுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோ மீட்டர்  வரை அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த கடற்பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் என திணைக்களம் தெரிவித்தது.

குறித்த கடற்பிராந்தியங்களுக்கு செல்வதை மறு அறிவித்தல் வரை தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு வளிமண்லவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரங்களுக்கு அப்பாலுள்ள கடற்பிரதேசங்களில் கடல் அலை 2.5 தொடக்கம் 3 மீட்டர் வரை உயரலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது