துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்..

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்..

by Staff Writer 29-05-2025 | 4:12 PM

Colombo (News1st) முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் 5ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் இன்று(29) ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளவத்தை அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கடந்த வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.