.webp)
பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் மின்விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
மின்விநியோகத் தடையை வழமைக்கு கொண்டு வருவதற்காக சில குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
ஏதேனும் பகுதிகளில் மின்விநியோகத் தடை ஏற்பட்டிருப்பின் CEB ASSIT எனும் செயலியூடாக உடனடியாக அறிவிப்பதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.