.webp)
Colombo (News 1st) Shakthi CROWN Season II இலங்கை பாடகர்களை சர்வதேச அரங்கிற்கு கொண்டுசெல்லும் குரல் தேடல்.
நாட்டின் தனித்துவமான ரியாலிட்டி இசை நிகழ்ச்சியான Shakthi CROWN Season II-இன் அங்குரார்ப்பண நிகழ்வு இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் வெகுவிமரிசையாக இன்று(29) மாலை நடைபெற்றது.
இலங்கை பாடகர்களுக்கென்றே தனித்துவமாக சிருஷ்டிக்கப்பட்ட விசேட பொறிமுறையின் கீழ் பாடும் ஆற்றலுக்கு களம் அமைக்கும் தனித்துவமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக Shakthi CROWN Season II திகழ்கின்றது.
இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல், MTV பிரதம செயற்பாட்டு அதிகாரி யசரத் கமல்சிறி, சக்தி தொலைக்காட்சியின் பணிப்பாளர் முருகேசு குலேந்திரன் உள்ளிட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் உயரதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
நாட்டின் முதற்தர இலத்திரனியல் சிருஷ்டிகர்த்தாக்களான MTV/MBC ஊடக வலையமைப்பு, முதற்தர செய்தி வழங்குநர் நியூஸ்ஃபெஸ்ட், தென்னாசியாவின் பிரம்மாண்ட கலைக்கேந்திரமான Stein Studios, இசையுலகின் புரட்சியாய் திகழும் MEntertainments உள்ளிட்ட ஊடகத்துறை ஜாம்பவான்களின் ஒருங்கிணைந்த பலத்துடன் தனித்துவமாய் Shakthi CROWN நிகழ்ச்சி வடிமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு தென்னிந்திய திரையுலக பிரபலங்களும் வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்திருந்தனர்.
நாட்டின் 16 பிரதேசங்களிலும் 8,000-இற்கும் அதிக போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சர்வதேச நாடுகளிலிருந்தும் இம்முறை போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இதன்போது உலகளாவிய ரீதியிலுள்ள இசை நாமங்களை இணைத்து Shakthi CROWN Season II-ஐ சர்வதேசத்திற்கு கொண்டுசெல்வதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
தனித்துவமான Shakthi CROWN Season II ரியாலிட்டி நிகழ்ச்சியில் திறமைகளை வௌிப்படுத்தி வெற்றி பெறும் இலங்கையின் நட்சத்திரங்கள், இசையுலகின் புரட்சியாய் திகழும் MEntertainments நிறுவனத்தின் ஊடாக சர்வதேச அரங்கில் மிளிர்வதற்கான அரிய வாய்ப்பை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.