.webp)
இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவினர் மற்றும் இலங்கையின் ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் புதுடில்லியில் நேற்று(27) நடைபெற்றது.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தனர்.
குறித்த தரப்பினர் இந்திய லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, உதவி சபாநாயகர், இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்திய இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது 2 நாடுகளுக்கிடையிலான உறவு இலங்கையை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப இந்தியா வழங்கும் ஒத்துழைப்புகள், இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினை, புலமைப்பரிசில் பரீட்சை திட்டம், கல்வித்திட்ட மேம்பாடு ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.