விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை..

க.பொ.த சாதாரணதர பரீட்சை நடைபெறும் பரீட்சை மத்திய நிலையங்களை அண்மித்து விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

by Staff Writer 14-02-2026 | 12:52 PM

COLOMBO(News1st) - க.பொ.த சாதாரணதர பரீட்சை நடைபெறும் பரீட்சை மத்திய நிலையங்களை அண்மித்து விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

புகையிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவித்தார். 

சாதாரணதர பரீட்சை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) ஆரம்பமாகவுள்ளது.