SJB-யுடன் கலந்துரையாட UNP-யில் குழு நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாட ஐக்கிய தேசியக் கட்சியினால் குழு நியமனம்

by Staff Writer 16-10-2025 | 2:29 PM

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடுவதற்காக மூவரடங்கிய குழுவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

அறிக்கை ஊடாக ஐக்கிய தேசியக் கட்சி இதனை தெரிவித்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன, கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அத்துகோரள, ஜனாதிபதி சட்டத்தரணி ரோலண்ட் பெரேரா ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.