.webp)
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கரூரில் நேற்று முன்தினம்(27) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து CBI விசாரணையை தமிழக வெற்றிக் கழகம் கோரியுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று(28) விசாரணை நடைபெறவுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கரூர் சம்பவம் விபத்து போன்று தெரியவில்லை எனவும் திட்டமிட்ட சதிபோலவே தெரிவதாகவும் சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதியிடம் தமிழக வெற்றிக் கழகத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கண்காணிப்பு கமெரா காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனவும் நடந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.