.webp)
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் உருக்கு மீதான வரிகளை 50 வீதமாக உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த புதிய வரி விதிப்பு எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது முன்னைய வரி விகிதத்தை விட 2 மடங்கு உயர்வென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீன இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் இந்த வரி உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு அமெரிக்க உருக்கு தொழிலாளிக்கும் 5,000 அமெரிக்க டொலர் ஊதிய உயர்வு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உருக்கு உற்பத்தி நிறுவனம் மற்றும் ஜப்பானின் நிப்போன் ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயற்பட 14 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.