.webp)
தென்னிந்திய திரைப்பட நடிகர் ராஜேஷ் தனது 75ஆவது வயதில் இன்று(29) காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக அவர் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் கே.பாலச்சந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அன்னார் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் 150-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
'கன்னிப் பருவத்திலே' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ராஜேஷ், பின்னர் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
அன்னார் வெள்ளித்திரை நடிகராக, டப்பிங் கலைஞராக, எழுத்தாளராக, சின்னத்திரை நடிகராக தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட கலைஞர் ராஜேஷின் மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.