.webp)
Colombo (News1st) யுக்ரேன் மீதான ரஷ்யாவின் புதிய தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் வௌியிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு தாம் வருந்துவதாகவும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் செயல்கள் தமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
யுக்ரேன் மீது கடந்த 02 நாட்களில் மாத்திரம் ரஷ்யா 367 ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
2022ஆம் ஆண்டு மோதல் ஆரம்பமாகியதிலிருந்து ரஷ்யா ஒரே தடவையில் முன்னெடுத்த பாரிய ட்ரோன் தாக்குதலாக இது காணப்படுகின்றது.