வர்த்தக நிலையத்தில் தீப்பரவல்

வர்த்தக நிலையத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

by Staff Writer 13-03-2025 | 1:45 PM

Colombo (News 1st) கொழும்பு சம்மாங்கோடு பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

இன்று(13) காலை 08.30 அளவில் தீ பரவியதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்கு 05 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டது.