Colombo (News 1st) 125,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகளை நாளை மறுதினம்(23) ஏலத்தில் விற்பனை செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதற்கான விலைமனுக்களை அன்றைய தினம்(23) முற்பகல் 11 அணி வரை சமர்ப்பிக்க முடியும்.
அத்துடன் இதற்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் 25 ஆம் திகதி மேற்கொள்ள முடியுமெனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.