மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை கையளிப்பு

மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிப்பு

by Staff Writer 25-10-2024 | 6:03 PM

Colombo (News 1st) மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள விலை சூத்திரத்துக்கு அமைவாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

குறித்த யோசனையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஆராய்ந்து  அனுமதியளிக்கும் பட்சத்தில் மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான விபரங்கள் வௌியிடப்படுமென இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.

மின் கட்டணத்தை குறைப்பதற்காக இந்த ஆண்டில் மின்சார சபையினால் யோசனை முன்வைக்கப்படும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதேவேளை, வெற்றிடம் ஏற்பட்டுள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்காக புதிய நபர்களின் பெயர்கள் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படுமென வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.