Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் விநியோகம் மற்றும் அதிகாரிகளை அழைத்து செல்லும் நடவடிக்கைகள் இன்று(25) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை(26) நடைபெறவுள்ளது.
காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி அலுவலகத்தில் இருந்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்தார்.
48 தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கான அதிகாரிகள் அழைத்து செல்லப்படுவதுடன் வாக்கு பெட்டிகள், ஆவணங்கள் என்பன விநியோகிக்கப்படுகின்றன.
காலி மாவட்ட செயலகம் உள்ளிட்ட அனைத்து வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கும் பொலிஸார் பாதுகாப்பு ஈடுபட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்தார்.
நாளை(26) தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள்,வாக்களிப்பு நிலையங்களிலேயே முன்னெடுக்கப்பட்டு தொகுதி ரீதியான முடிவுகள் 17 மத்திய நிலையங்களில் தயாரிக்கப்படுக்கப்படுமென அவர் கூறினார்.
அந்த முடிவுகள் காலி மாவட்ட செயலகத்திக்கு அனுப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்தார்.