பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை தபால்மூல வாக்கு முடிவு

பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை தபால்மூல வாக்கு முடிவுகளில் அனுர முன்னிலை

by Rajalingam Thrisanno 22-09-2024 | 2:07 AM

Colombo (News1st) பொலன்னறுவை மாவட்டத்தின் தபால்மூல வாக்கு முடிவு வௌியாகியுள்ளது. அனுர குமார திசாநாயக்க 11,768 வாக்குகளைப் பெற்று முன்னிலை அடைந்துள்ளார். சஜித் பிரேமதாச 4120 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க 2762 வாக்குகளையும் நாமல் ராஜபக்ஸ 188 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் தபால்மூல வாக்கு முடிவுகள் பிரகாரம் அனுர குமார திசாநாயக்கவே வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு ஆதரவாக  14,482 வாக்குகள் கிடைத்துள்ளன. சஜித் பிரேமதாச 3397 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க 2502 வாக்குகளையும் நாமல் ராஜபக்ஸ 819 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.