Colombo (News1st) வழமையான நேர அட்டவணையின் பிரகாரம் இன்று(21) பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படாதென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
தேவைக்கேற்றவாறு மாத்திரம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு டிப்போ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் கூறியுள்ளார்.
மாலை மற்றும் இரவு வேளைகளில் முன்னெடுக்கப்படும் பஸ் சேவைகள் வெகுவாக குறைவடையலாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பஸ் சேவைகளும் இன்று வழமை போன்று இடம்பெறாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பயணிகளின் வருகை குறைவாக இருப்பதே இதற்குக் காரணமென ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
மாலை வேளையில் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்படலாமெனவும் அவர் கூறியுள்ளார்.