ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

by Staff Writer 21-09-2024 | 10:13 AM

Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் கடமைகளுக்காக 63000-இற்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விசேட பாதுகாப்பு தேவைப்படும் பகுதிகளில் முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சுயாதீனமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.