நேர்முக பரீட்சை ஏப்ரல் 29 ஆரம்பம்

தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை ஏப்ரல் 29 ஆரம்பம்

by Bella Dalima 26-04-2024 | 3:07 PM

Colombo (News 1st) தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை (29) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது. 

மார்ச் மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற ஆசிரியர் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, இவர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கமைய, புதிதாக 2053 பட்டதாரிகள், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

உயர் தர விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், சர்வதேச மொழிகள் மற்றும் தரம் 13-இற்கான அனைத்து பாடங்களுக்கும் ஆசியர்கள் நியமிக்கப்பட்டவுள்ளனர்.

பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், நேர்முக பரீட்சைக்கு தகுதி பெற்ற பட்டதாரிகளின் பெயர்கள் அமைச்சின் இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.