Colombo (News 1st) கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளும் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விதிகளை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களத்தின் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, அண்மையில் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் மே மாதம் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.