இருவேறு இடங்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இருவேறு இடங்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

by Bella Dalima 04-05-2024 | 3:52 PM

Colombo (News 1st) இரத்தினபுரி - நிவித்திகல, ஜயபுரகம மற்றும் நுவரெலியா - ஹங்குரான்கெத்த பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

31 மற்றும் 45 வயதுடைய இருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நிவித்திகல, ஜயபுரகம பிரதேசத்தில் ஆற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஹங்குரான்கெத்த - அம்பேவல ஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த உயிரிழப்புகள் தொடர்பான விசாரணைகளை  பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.