SLFP நெருக்கடி தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நெருக்கடி தொடர்பில் ஆராய இன்று(25) கலந்துரையாடல்

by Staff Writer 25-04-2024 | 8:49 AM

Colombo (News 1st) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக இன்று(25) மாலை கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு, கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இங்கு தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்