சீதா எலிய சீதையம்மன் ஆலயத்தில் சுவாமி கோவிந்த தேவ் கிரிஜி மஹராஜ் வழிபாடு

by Staff Writer 24-04-2024 | 6:34 PM

Colombo (News 1st) இலங்கைக்கு வருகை தந்துள்ள அயோத்தி ஸ்ரீ இராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த தேவ் கிரிஜி மஹராஜ் இன்று வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்தார்.

நுவரெலியா சீதா எலிய சீதையம்மன் ஆலய நிர்வாக சபைத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட  உறுப்பினர்களால் சுவாமி கோவிந்த தேவ் கிரிஜி மஹராஜ் மலர் மாலை அணிவித்து  வரவேற்கப்பட்டார். 

சீதா எலிய சீதையம்மன் ஆலயத்தில் சுவாமி கோவிந்த தேவ் கிரிஜி மஹராஜ் பூஜைகளை நடத்தி  வழிபாடுகளில் ஈடுபட்டார். 

அதன் பின்னர் இராமாயணத்தில் சீதை சிறை வைக்கப்பட்ட இடமாகக் கருதப்படும் அசோக வனத்திலுள்ள சீதையம்மன் ஆலயத்தின் ஆற்றுக்கு அருகிலுள்ள ஹனுமானின் கால் தடங்களையும் சுவாமி கோவிந்த தேவ் கிரிஜி மஹராஜ் வணங்கினார். 

இதனையடுத்து சுவாமி கோவிந்த தேவ் கிரிஜி மஹராஜ் உள்ளிட்ட குழுவினர் ஆலய சூழலையும் பார்வையிட்டனர். அதன் பின்னர் ஆலயத்திலுள்ள தீர்த்த ஆற்றிலும்  அவர் வழிபாடு செய்தார்.

நுவரெலியாவில் உள்ள தனியார் விடுதியொன்றில் சீதையம்மன் ஆலய நிர்வாக சபையினருடன் சுவாமி கோவிந்த தேவ் கிரிஜி மஹராஜ் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். 

ஏனைய செய்திகள்