தேசிய மக்கள் சக்திக்கு SJB கடிதம்

ஐக்கிய மக்கள் சக்தியால் தேசிய மக்கள் சக்திக்கு கடிதம்

by Staff Writer 24-04-2024 | 12:36 PM

Colombo (News 1st) தலைவர்கள், பொருளாதார குழுக்களுக்கு இடையிலான விவாதத்திற்கான திகதியை ஒதுக்குவதற்காக நாளை(25) அல்லது நாளை மறுதினம்(26) பாராளுமன்றத்திற்கு வருகை தருமாறு ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்திக்கு அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான நலீன் பண்டார, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவிற்கு கடிதமொன்றை அனுப்பி இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலும் 2 கட்சிகளின் பொருளாதார குழுக்களுக்கு இடையிலும் இடம்பெறவுள்ள விவாதத்திற்கான திகதியை ஒதுக்குவதற்காக நாளை(25) அல்லது நாளை மறுதினம்(26) பாராளுமன்றத்திற்கு வருகை தருமாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி தன்னால் அனுப்பப்பட்ட கடிதத்தில் முதலில் பொருளாதார குழுக்களுக்கு இடையிலும் அதன்பின்னரே தலைவர்களுக்கு இடையிலும் விவாதத்தை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டிருந்ததாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, விவாதத்தை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவது தொடர்பில் இருதரப்பினருக்கு இடையே இதன்போது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.