2 நாட்களுக்கு கைதிகளை பார்வையிட வாய்ப்பு

நாளையும், நாளைமறுதினமும் கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பம்

by Staff Writer 23-12-2023 | 1:59 PM

நாளையும் நாளை மறுதினமும் பொலிஸாருடன் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த 2 நாட்களிலும் கைதிகளை பார்வையிட அதிகளவானோர் வரக்கூடும் என்பதால் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவினால் அனைத்து சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்கும் உரிய பணிப்புரை விடுத்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ திஸாநாயக்க தெரிவித்தார்.

நாளையும்  நத்தார் பண்டிகையான நாளைமறுதினமும் சிறை கைதிகளை உறவினர்கள் பார்வையிட வாய்ப்பளிக்க சந்தர்ப்பமளிக்கப்படவுள்ளது.

சிறைச்சாலை விதிமுறைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ திஸாநாயக்க தெரிவித்தார்.

கைதிக்கு தேவையான உணவை மாத்திரமே உறவினர்கள் கொண்டுவர முடியும் என்பதுடன் தடைசெய்யப்பட்ட பொருட்கள் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.