.webp)
-559614.jpg)
COLOMBO (News 1st) விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவராக ஓய்வுபெற்ற அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அனுர கருணாதிலகவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற அட்மிரல் காஞ்சன பானகொட எதிர்வரும் முதலாம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இவர் நாட்டின் 26ஆவது கடற்படை தளபதியாவார்.
