.webp)
கற்றல் நடவடிக்கைகளிலிருந்து கடந்த 03 வருடங்களில் 20,000 மாணவர்கள் இடைவிலகியுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
புதிய கல்வி மறுசீரமைப்பு யோசனைகள் தொடர்பில் மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளை தௌிவுபடுத்தும் வடமேல் மாகாணத்திற்கான கலந்துரையாடல் குருணாகல் மாவட்ட செயலகத்தில் நேற்று(30) நடைபெற்றது.
கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் அதிகாரிகளுக்கு தௌிவுப்படுத்தும் போதே பிரதமர் இதனை கூறினார்.
நாளாந்தம் பாடசாலை நேரத்தில் 50 வீத மாணவர்களே வகுப்பறையில் இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த வருடத்தில் தரம் ஒன்றுக்கும் தரம் 6க்கும் புதிய பாடவிதானங்களை அறிமுகப்படுத்துவதாகவும் இதன்மூலம் புதிய இலக்குகளை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் துறைசார் அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.