தீர்த்தக்கேணியில் தவறி வீழ்ந்து 2 சிறுமிகள் பலி

தீர்த்தக்கேணியில் தவறி வீழ்ந்து 2 சிறுமிகள் உயிரிழப்பு

by Staff Writer 01-06-2025 | 6:22 PM

Colombo (News 1st) முல்லைத்தீவு - குமுழமுனை பகுதியில் வழிப்பாட்டுத் தலமொன்றின் தீர்த்தக்கேணியில் தவறி வீழ்ந்து 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

நிழற்​படம் எடுப்பதற்காகச் சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த15 வயதான 2 சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு - உடுப்புக்குளம் பகுதியில் தாமரைப்பூ பறிப்பதற்காக சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் பயணித்த தோணி கவிழ்ந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடுப்புக்குளம் பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனும் 10 வயதான சிறுவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.