மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்

by Rajalingam Thrisanno 03-06-2025 | 4:41 PM

Colombo (News 1st) மனைவியின் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் வவுனியாவில் பதிவாகியுள்ளது.

வாய்த்தர்க்கத்திற்கு முடிவு காண பொலிஸ் நிலையம் சென்று வீடு திரும்பும் வழியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பதியினர் வவுனியா நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர் இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருப்பதாகவும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

அதன்பின்னர் இருவரும் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது மீண்டும் தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு தலையை எடுத்துக்கொண்டு போய் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் 32 வயதான முன்பள்ளி ஆசிரியர் எனவும் அவர் 3 மாத கர்ப்பிணி எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபரான 34 வயது கணவன் நாளை(04) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.