பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது

பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது

by Staff Writer 12-03-2025 | 10:43 AM

COLOMBO (News 1st) அனுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபர் இன்று(12) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கல்னேவ பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிசை பகுதியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சந்தேகநபராக விளக்கமறியலில் வைக்கப்பட்டு சம்பவ தினத்திற்கு முதல்நாள் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.