Colombo (News 1st)இந்து - பசுபிக் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக G7 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியின் மிலானோ நகரில் நடைபெற்ற G7 முதலாவது அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர்கள் இதனை கூறியுள்ளனர்.
சீனாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்து - பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.