இந்திய வான்பரப்பு பாதுகாப்பாக உள்ளது

இந்திய வான்பரப்பு பாதுகாப்பாக உள்ளது - இந்திய சிவில் விமான பாதுகாப்புப் பிரிவு

by Staff Writer 20-10-2024 | 4:56 PM

Colombo (News 1st) இந்திய வான்பரப்பு பாதுகாப்பாக உள்ளதாக இந்திய சிவில் விமான பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேவையற்ற அச்சங்களை கொண்டிராமல் பயணிகள் தமது விமானப் பயணங்களை மேற்கொள்ள முடியுமென இந்திய சிவில் விமான பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுல்பிகர் ஹசன் தெரிவித்துள்ளார்.

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதையடுத்து விமான நிறுவனங்களின் பிரதானிகளுடன் அவசர கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

நேற்று(19) மாத்திரம் இந்தியாவில் 30 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்திய விமானங்களுக்கு 6 நாட்களுக்குள் 70 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதனிடையே, விமானங்களுக்கு போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுப்போருக்கு ஆயுள்தண்டனை விதிப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.