![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) ஹொரணை மற்றும் கொழும்பு பிரதான வீதியூடான வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
கொஹூவல முச்சந்தியின் மேம்பால நிர்மாண பணிகள் காரணமாக அந்த வீதியுடான போக்குவரத்து இன்று (15) முதல் இரண்டு மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரையான, இரண்டு மாதங்களுக்கு இந்த வீதியுடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஹொரணை மற்றும் கொழும்பு பிரதான வீதியானது, பொதுப்போக்குவரத்து வாகனங்களுக்காக மாத்திரம் திறக்கப்பட்டிருக்குமெனவும், ஏனைய வாகனங்கள் மாற்றுவீதிகளில் பயணிக்க வேண்டுமெனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த வீதியூடாக பயணிக்கும் கனரக வாகனங்கள் கொஹூவல பாலம் ஊடாக உட்பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் கொஹூவல முச்சந்தி ஊடாக ஹொரணை - கொழும்பு பிரதான வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள் இயலுமானவரை மாற்றுவீதிகளை பயன்படுத்த வேண்டுமெனவும் பொலிஸார் அறிவறுத்தியுள்ளனர்.