“வசத் சிரிய 2024” புத்தாண்டு கொண்டாட்டம்

“வசத் சிரிய 2024” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்பு

by Staff Writer 27-04-2024 | 5:38 PM

Colombo (News 1st) “வசத் சிரிய  2024” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்  பெருந்திரளான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் இன்று (27) நடைபெற்றது. 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புத்தாண்டு கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அரசதுறை, திறந்த துறை மற்றும் விருந்தினர் துறை ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பல போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்திருந்ததுடன்  பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு திணைக்கள  தலைவர்கள், கௌரவ அதிதிகள், வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

புத்தாண்டு விழா நடைபெறும் இடத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.