பாராளுமன்றுக்கு பெண் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை

டயானா கமகேவின் பாராளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கு பெண் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை

by Bella Dalima 09-05-2024 | 5:30 PM

Colombo (News 1st) டயானா கமகேவின் பாராளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியினரால் தேர்தல்கள் ஆணையாளருக்கு இன்று (09) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டயானா கமகேவின் பாராளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கு பொருத்தமான பெண் ஒருவரை நியமிக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெற்றிடத்திற்கு பொருத்தமான பெண் ஒருவரை நியமிக்குமாறு கோரி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

பெண்களின் அனுபவம், அறிவு மற்றும் எதிர்கால சிந்தனை என்பன சமூகத்திலுள்ள அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலான கொள்கைகளை வகுப்பதில் பங்களிக்க வேண்டும் எனவும், பயனுள்ள ஜனநாயகத்திற்கு பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முக்கியமானது எனவும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.