மத்தளை விமான நிலைய முகாமைத்துவத்தை இரண்டு நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 26-04-2024 | 5:19 PM

Colombo (News 1st) மத்தளை விமான நிலையத்தின் முகாமைத்துவத்தை இரண்டு நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதற்கு ஐந்து நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவின் M/s Shaurya Aeronautics Pvt. Ltd மற்றும் ரஷ்யாவின் Airports of Regions Management Company ஆகிய நிறுவனங்களுக்கு 30 வருடங்களுக்கு மத்தளை விமான நிலையத்தினை முகாமைத்துவம் செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மத்தளை சர்வதேச விமான நிலையத்தை முகாமைத்துவம் செய்வதற்கான விருப்பத்தைக் கோர கடந்த ஜனவரி மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.