Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான இணுவில் குப்பைக் கிடங்கில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இணுவில் காரைக்கால் குப்பைக் கிடங்கில் நேற்றிரவு(06) தீ பரவியது
யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு படையினரின் நீண்ட நேர பிரயத்தனத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
தீ பரவியமைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இந்த குப்பைக் கிடங்கில் 2 ஆண்டுகளுக்கு முன்னரும் பாரிய தீ பரவியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.