IMF-இன் கடன் தவணை கொடுப்பனவு நாட்டிற்கு..

சர்வதேச நாணய நிதியத்தினால் 695 மில்லியன் டொலர் கடன் தவணைக் கொடுப்பனவு நாட்டிற்கு..

by Staff Writer 03-06-2026 | 3:27 PM

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தினால்(IMF) இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட 06 மற்றும் 07ஆவது தவணைகளுக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி நாட்டிற்கு கிடைத்துள்ளது.

குறித்த நிதி நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் பிரதியமைச்சர், கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார்.

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவை வலுவானதொரு நாணயமாகப் பேணுவதற்கு குறித்த நிதி வரவு வைக்கப்பட்டமை ஒரு முக்கிய காரணியாகும் என பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த குறிப்பிட்டார்.