சம்பத் மனம்பேரிக்கு தொடர்ந்தும் தடுப்புக்காவல்..

சம்பத் மனம்பேரிக்கு தொடர்ந்தும் தடுப்புக்காவல் உத்தரவு

by Staff Writer 24-12-2025 | 6:20 PM

Colombo (News 1st) சம்பத் மனம்பேரியை எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி வரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கான தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடிதுவக்கு முன்னிலையில் சந்தேகநபர் இன்று(24) ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

சம்பத் மனம்பேரி தற்போது கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.

ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 02 கொள்கலன்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியின் சகோதரர் பியல் மனம்பேரி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவு நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தது.

சம்பத் மனம்பேரியின் வாக்குமூலங்களுக்கமைய மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது.