2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து பலியான 2 வயது குழந்தை

by Staff Writer 21-12-2025 | 7:13 PM

Colombo (News 1st) அரலகங்வில கந்தேகம பகுதியில் நீர் நிரம்பிய குழிக்குள் வீழ்ந்து குழந்தையொன்று உயிரிழந்தது.

அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கந்தேகம பகுதியைச் சேர்ந்த 2 வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.