.webp)
Colombo (News 1st) தங்காலை - நெடொல்பிட்டி பகுதியிலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெண்ணொருவருக்கு சொந்தமான காணியொன்றின் எல்லைக் கல்லை நடுவதற்காக குழி தோண்டும் போது இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.