இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இலவச விமான பயணவசதி

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இந்தியா வரை இலவச விமான பயண வசதி

by Staff Writer 23-06-2025 | 10:02 AM

Colombo (News1st) 

இந்திய அரசாங்கத்தின் இலவச விமான பயண வசதிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் நாடு திரும்புவதற்கு எதிர்பார்க்கும் இலங்கை பிரஜைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பதிவு செய்வதற்கான செயற்பாடுகள் இன்றும்(23) நாளையும்(24) மாத்திரம் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

ஜோர்தானின் அம்மான் நகரிலிருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கி செயற்படுத்தப்படவுள்ள இந்த விமானங்களில் இலங்கையர்களுக்காக சில ஆசனங்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த விமானங்களில் பயணிக்க எதிர்பார்ப்பவர்களுக்கு இஸ்ரேலின் - டெல் அவிவ் நகரிலிருந்து ஜோர்தானின் அம்மான் நகருக்கு செல்வதற்கு இலவச போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும் எனவும் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

ஜோர்தானிலிருந்து இந்தியாவின் புதுடெல்லிக்கான விமான சேவைக்கும் கட்டணம் அறவிடப்படமாட்டாது எனவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியிருந்து கொழும்பிற்கு வருகை தருவதற்காக அவர்கள் கட்டணம் செலுத்தி விமான பயணச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

விமான பயணங்களின் போது உரிய நாடுகளின் தூதரகங்களினூடாக அதற்கான நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.