.webp)
Colombo (News1st) யாழ்ப்பாணம் - பண்ணை பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் மின்தூக்கியிலிருந்து வீழ்ந்து இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஹோட்டலின் சேவையாளராக பணியாற்றிய குறித்த இளைஞன் பொருட்களை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்ட மின்தூக்கியில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.