நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் மழை

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை

by Staff Writer 12-06-2025 | 7:54 AM

Colombo (News 1st) சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.