தேசிய பொசன் வாரம் இன்று முதல் ஆரம்பம்..

தேசிய பொசன் வாரம் இன்று முதல் ஆரம்பம்

by Staff Writer 07-06-2025 | 12:09 PM

தேசிய பொசன் வாரம் இன்று(07) ஆரம்பமாகின்றது.

எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொசன் வாரத்தை முன்னிட்டு அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதுபான சாலைகளை முடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேசிய பொசன் நிகழ்வை முழுமையான அரச அனுசரணையுடன் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பிரதேசங்களை மையமாக கொண்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

தேசிய பொசன் நிகழ்வுகளை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக 8,000  பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.